Wednesday, November 22, 2006

Padithathil Pidithathu - I

I like to share some of the wonderful & Interesting things which I read Some how & Some where.

க‌ட‌லை போட்டுப்பார்
'காதலித்துப்பார்'க்க சொன்னார் வைரமுத்து.
கடலை போட்டுப்பார்த்தால் எப்படியிருக்கும்?

க‌ட‌லை போட்டுப்பார்

உன்னை நீயே
அழகாய் காண்பாய்;
பேச்சில் சுவை கூடும்
ரசனைகள் மாறும்
அவ‌ச‌ர‌மாய் ஆங்கில‌ம் க‌ற்பாய்;
அக‌ராதி துணையுட‌ன்
அகதா கிறிஸ்டி படிப்பாய்.

க‌ட‌லை போட்டுப்பார்!!*

இர‌வுக்கும் ப‌க‌லுக்கும்
வித்தியாச‌ம் ம‌றப்பாய்;
மனிதத் தனிமை சுகமென்பாய்,
தொலைபேசி துணையில்இன்புறுவாய்.
செல்பேசிச் சூட்டிலே
வார்த்தைகள் உருகும்
குறுந்த‌கவ‌ல் அனுப்பியே
க‌ட்டைவிர‌ல் தேயும்.

க‌ட‌லை போட்டுப்பார்!!*

நாளின் நீள‌ம்
குறைவென்பாய்
பத்து நிமிட அலுவலும்
பளுவாய் படும்.
காத‌ல் பாட‌ல்க‌ள்
மட்டுமே இசையாகும்;
க‌விதை எழுத புறப்ப‌டுவாய்.
ஆள் பாதி,ஆடை பாதி;
மேன்மையான‌ நீதியென்று
மெனக்கெடுவாய்.

க‌ட‌லை போட்டுப்பார்!!

1 Comments:

At 9:41 PM, Blogger Sudarshan said...

Translation please..... :)

 

Post a Comment

<< Home